அன்னையின் அருள்வாக்கு “எனக்கு உருவம் கிடையாது. என்னுடைய தோற்றங்கள் அணு, சோதி, குழந்தை, பாம்பு, விளக்கு, சித்தர் முதலியன ஆகும்.”  என்பது அன்னையின் அருள்வாக்கு. இவற்றுள் சோதி, விளக்கு என்பன குறிப்பிடத்தக்கவை. விளக்கின் சோதியிலும் அன்னை ஆதிபராசக்தி இருக்கிறாள் என்று புரிகிறது அல்லவா? விளக்கு வழிபாடு ஒளி வெளியே இருந்தால் மட்டும் போதாது. நம் உள்ளேயும் ஒளி இருக்க வேண்டும். உள்ளும் புறமும் ஒளி ஏற்றி அஞ்ஞான இருள் அகலவே விளக்கு வழிபாடு! காலையும் மாலையும் விளக்கேற்றி வழிபடும் வீ டுகளில் லட்சுமி குடியிருக்கிறாள். ஒரு வீட்டின் பூசை அறையில் 24 மணி நேரமும் விளக்கு எரிவது சிறப்பு!   குத்து விளக்கின் ஜந்து முகங்கள் பொதுவாக ஜந்து முகம் கொண்ட குத்து விளக்கையேற்றி வழிபடுவது வழக்கம். அந்த ஜந்து முகங்களும் பெண்களுக்குரிய ஜந்து குணங்களைக் குறிக்கின்றன. 1.  அன்பு  2.  மனவுறுதி  3.  நிதானம் 4.  சமயோசித புத்தி 5.  பொறுமை ஆகியவற்றைக் குறிக்கின்றன.   திரு விளக்கின் உறுப்புகள் தெய்வங்களைக் குறிப்பவை 1. தாமரை போன்ற ஆசனம்- பிரம்மா 2. நெடிய தண்டு- விஷ்ணு 3. நெய்-அகல்- ருத்திரன் 4. திரியின் முனைகள்- மகேஸ்வரன் 5. நுனி- சதாசிவன்  6. நெய்- நாத தத்துவம் 7. திரி- விந்து தத்துவம் 8. சுடர்- திருமகள் 9. பிழம்பு- கலைமகள் 10. ஜோதி- பிரம்மம்   விளக்கும் எண்ணெயும்  விளக்கு எரிக்கக் கடலை எண்ணெய் பயன்படுத்தக்கூடாது.பின்வருவன நன்மை தரும். 1. நெய் – சகலவித செல்வத்தையும், வீட்டில் நலனையும் தரும். 2. நல்லெண்ணெய் – எல்லாப் பீடைகளையும் விலக்கும். 3. விளக்கெண்ணெய் – உடல் ஆரோக்கியம், புகழ், உறவினர், சுகம், தாம்பத்திய சுகம், ஆகியவற்றை விருத்தி செய்யும். முக்கூட்டு எண்ணெய் வேப்பெண்ணெய், நெய், இலுப்பை எண்ணெய் மூன்றும் கலந்து தீபம் இடுவதால் செல்வம் உண்டாகும். இது குலதெய்வத்திற்கு உகந்தது.  ஜங்கூட்டு எண்ணெய்  நெய், விளக்கெண்ணெய், வேப்பெண்ணெய், இலுப்பை எண்ணெய், தேங்காய் எண்ணெய் இவை கலந்து ஏற்றி எவர் ஒருவர் ஒரு மண்டலம்(45 அல்லது 48) நாட்கள் பூசை செய்கிறார்களோ அவர்களுக்குத் தேவியின் அருள் உண்டாகும். விடியற்காலை விளக்கு வழிபாடு விடியற்காலை 3.00 மணி முதல் 5.00 மணிக்குள் வீட்டில் விளக்கேற்றி வழிபட்டால் சர்வமங்கள யோகம் உண்டாகும்.   விளக்கும் முகங்களும்  * ஒருமுகம் ஏற்றி வழிபடுவது – மத்திய பலன் * இரண்டு முகம் ஏற்றி வழிபடுவது- குடும்ப ஒற்றுமை பெருகும் * மூன்று முகம் ஏற்றி வழிபடுவது -புத்திர சுகம் தரும் * நான்கு முகம் ஏற்றி வழிபடுவது – பசு, பூமி இவற்றைத் தரும் * ஜந்து முகம் ஏற்றி வழிபடுவது – செல்வத்தைப் பெருக்கும்    திசைகளும் பலன்களும் 1. கிழக்கு – இந்தத் திசையில் தீபம் ஏற்றி வழிபட்டால் துன்பம் ஒழியும். வீட்டில் உள்ள பீடைகள் அகலும். 2. மேற்கு – இந்தத் திசையில் தீபம் ஏற்றி வழிபட்டால் கடன் தொல்லை, சனிபீடை, கிரகதோஷம்,       பங்காளிப்பகை இவை நீங்கும். 3. வடக்கு – இந்தத் திசையில் தீபம் ஏற்றி வழிபட்டால் செல்வமும், மங்கலமும் பெருகும்.  4. தெற்கு – இந்தத் திசையில் தீபம் ஏற்றக் கூடாது. இது பெரும் பாவம், அபசகுணம்.   விளக்குப் பூசைக்கு ஏற்ற நாட்கள் அன்றாடம் காலை, மாலை விளக்கேற்றி வழிபடுவது சிறப்பு. விசேஷட நாட்களில் விளக்குப் பூசை செய்வது மேலும் பல நன்மைகள் தரும்.  விசேஷநாட்கள் பின்வருமாறு 1. வெள்ளிக் கிழமை 2. கார்த்திகை, திருவாதிரை, பூசம், விசாகம், திருகோணம் ஆகிய நாட்கள் 3. பெளர்ணமி 4. அமாவாசை 5. சதுர்த்தி, பஞ்சமி, ஏகாதசி ஆகிய திதிகள் 6. நவராத்திரி 7. சிவராத்திரி 8. ஆடிச் செவ்வாய் 9. ஆடி வெள்ளி 10. தைச் செவ்வாய் 11. தை வெள்ளி  வாரத்தில் செவ்வாய், வெள்ளி நாட்களில் ஓம் சக்தி விளக்கேற்றி வைத்து, நம் பெண்கள் 108 மந்திரம் சொல்லி, குங்கும அர்ச்சனை செய்வதால் நன்மை பல கிடைக்கும்.   பூசைக்கு ஏற்ற விளக்குகள் குத்து விளக்கு அல்லது பூசை விளக்குகட்கு வெள்ளி விளக்கு சிறப்புடையது. ஜம்பொன் விளக்கு அடுத்து சிறப்புடையது. வெண்கல விளக்கு அடுத்து சிறப்புடையது. பித்தளை விளக்கு அதற்கு அடுத்த சிறப்புடையது. எக் காரணம் கொண்டும் எவர் சில்வர் விளக்கை பூசைக்கோ, வீடுகளில் ஏற்றுவதற்கோ பயன்படுத்தக்கூடாது. அதைவிட மண் அகல் விளக்கு உத்தமம்.   விளக்கேற்றும் நேரம் * காலை 3.00 மணி முதல் 5.00 மணிக்குள் விளக்கேற்ற சர்வமங்கள யோகத்தைத் தரும். * மாலை 6.00 மணி அளவில் வீட்டில் விளக்கேற்றி மகாலட்சுயை வழிபட வேலை, நல்ல கணவன், குடும்ப சுகம், புத்திர சுகம் ஆகியவை கிட்டும். * காலை விளக்கேற்றும் போது உடல், மனம் சுத்தத்துடன், வாசலில் சாணம் தெளித்து,  கோலம் போட்ட பின்னரே விளக்கேற்ற வேண்டும். * மாலையில் விளக்கேற்றும் போது, வாசலில் தண்ணீர் தெளித்துக் கோலம் போட்ட பின்னரே விளக்கேற்ற வேண்டும். * காலை, மாலை விளக்கேற்றும் போது கொல்லைப்புறக் கதவைச் சாத்தி விட வேண்டும். கொல்லைபுறக் கதவு இல்லாதவர்கள் பின்பக்கம் உள்ள ஜன்னல் கதவைச் சாத்தியே விளக்கேற்ற வேண்டும்.  * விளக்கேற்றும் போது, விளக்கிற்கு பால், கற்கண்டு, நிவேதனம் வைத்து வழிபட்டால் எல்லா நன்மைகளும் கிட்டும்.   விளக்கேற்றிய பிறகு செய்யக்கூடாதவை 1. விளக்கேற்றிய பிறகு தலை சீவக்கூடாது. 2. வீட்டைப் பெருக்கிக் கூட்டக்கூடாது. 3. சுமங்கலிப் பெண் விளக்கேற்றியவுடன் வெளியே செல்லக் கூடாது. 4. விளக்கேற்றியவுடன் துணி துவைக்கக் கூடாது. 5. விளக்கேற்றியவுடன் தலை குளிக்கக் கூடாது. 6. விளக்கேற்றும் நேரத்தில் உறங்கக் கூடாது. 7. விளக்கேற்றியவுடன் சாப்பிடக்கூடாது.  8. விளக்கேற்றிய பிறகு பால், மோர், உப்பு, தவிடு, சுண்ணாம்பு, அரிசி, கடன் ஆகியவற்றக் கொடுக்கக்கூடாது.   விளக்குப் பூசை செய்வோர்க்குச் சில குறிப்புகள் 1. இரு விளக்கை வைத்து வணங்கக் கூடாது. ஒன்று அல்லது மூன்று விளக்குகளை வைத்தே வணங்க வேண்டும். 2. காலையில் லட்சுமிக்கு விளக்கேற்றி வணங்கினால் செல்வம் பெருகும்.   3. காலையிலும், மாலையிலும் குறித்த நேரத்தில் விளக்கேற்றி வணங்கி வந்தால் செல்வம் பெருகும், பாவம் விலகும். 4. விளக்கைக் கிழக்குத் திசை நோக்கி வைப்பது சிறப்பு. 5. திரு விளக்குப் பூசையில் விளக்கிற்கு அர்ச்சித்த குங்குமத்தை எடுத்து சுமங்கலிகள் தாலியிலும், தலை உச்சி வகிட்டிலும் வைத்துவர அவர் தம் கணவர் நலமுடன் வாழ்வர். 6. பூசை செய்யும்போது விளக்கைத் தலைவாழை மீது வைத்து பூசை செய்வது சிறப்பு. 7. விளக்கின் சுடர் நின்று நிதானமாக எரிய வேண்டும். நடுங்கக் கூடாது. புகையக் கூடாது. மெல்லத் தணிந்து அடங்கக் கூடாது.  8. மிகச் சிறியதாக அல்லது மிகப்பெரியதாக சுடர் எரியாமல் விளக்கின் அமைப்பிற்கும் அளவிற்கும் தக்கபடி எரிய வேண்டும். 9. சுடரில் புகை தோன்றினாலும், திரி கருகினாலும் அதற்குக் காரணமான எண்ணெயையோ, திரியையோ உடனே மாற்ற வேண்டும். 10. விளக்கில் குளம்போல எண்ணெயை ஊற்றி தீபம் ஏற்ற வேண்டும். 11. விளக்கின் சுடரில் மகாலட்சுமி நிறைந்து நிலைத்து நிற்கின்ற காரணத்தால் அச்சுடரைக் கையாலும், கையால் வீசிய காற்றாலும், வாயால் ஊதியும் குளிரச் செய்வது பெரிய குற்றம். 12. பூக்களால் அணைத்துக் குளிர வைக்கலாம். திரியை உள்ளே இழுத்து ஒளியை எண்ணெயில் மறையச் செய்யலாம். 13. அதிகாலை எழுந்ததும் பூசை அறையில் குத்து விளக்கு அல்லது காமாட்சி விளக்கு ஏதேனும் ஒன்றை ஏற்றி வைக்க வேண்டும். 14. தீபம் மகாலட்சுமி வாசம் செய்யும் இடம். அது மங்கலச் சின்னம். இல்லறம் பிரகாசமாக இருக்க எப்போதும் தீபமும் பரிசுத்தமாக இருக்க வேண்டும். 15. தீபம் வைத்தவுடன் உடனே முகம் கழுவுதல், கறி காய் நறுக்குதல், அரிசி களைதல் போன்றவற்றைச் செய்யக் கூடாது.  அடுப்பேற்ற.... சுமங்கலிப் பெண்கள் காலையில் குளித்துவிட்டு, காமாட்சி அம்மனை விளக்கேற்றி வழிபட்டு, அதிலிருந்து தீப ஒளியைக் கொண்டு அடுப்பேற்றிவர சகல நன்மைகள் ஏற்படும்.   அமாவாசை பெளர்ணமி விளக்குப் பூசை பலன்கள்    சித்திரை: அமாவாசை பெளர்ணமி- தானியம் உண்டாகும். வைகாசி: அமாவாசை பெளர்ணமி- செல்வம் உண்டாகும். ஆனி: அமாவாசை பெளர்ணமி -திருமணம் நடைபெறும். ஆடி: அமாவாசை பெளர்ணமி -ஆயுள் விருத்தி உண்டாகும். ஆவணி: அமாவாசை பெளர்ணமி -புத்திரப்பேறு உண்டாகும் புரட்டாதி: அமாவாசை பெளர்ணமி -பசுக்கள் விருத்தி உண்டாகும் ஜப்பசி: அமாவாசை பெளர்ணமி -பசிப்பிணி நீங்கும். கார்த்திகை: அமாவாசை பெளர்ணமி- நற்கதி உண்டாகும் மார்கழி: அமாவாசை பெளர்ணமி -ஆரோக்கிய வாழ்வு உண்டாகும் தை: அமாவாசை பெளர்ணமி -வாழ்க்கையில் வெற்றி உண்டாகும். மாசி: அமாவாசை பெளர்ணமி -துன்பம் அகலும் பங்குனி :அமாவாசை பெளர்ணமி- தரும சிந்தனையை உண்டுபண்ணும்.                                                                             ஒம் சக்தி! நன்றி ஆன்மிக குரு அருள் திரு அம்மாவின் அவதாரம்  பக்கம் 17-21.    ]]>

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here