தியானம் செய்யும் போது நிமிர்ந்து உட்காரவும். மூக்கின் நுனியைப் பார்க்கவும். காட்சி நரம்புகள் இரண்டையும் அடக்குவதால் எதிர்ச்செயலுக்குரிய வட்டத்தை வழிப்படுத்தி அதன் மூலம் சித்தத்தையும்
வசப்படுத்தலாம்.
தலைக்கு உயரே சில அங்குலங்களுக்கு அப்பால் ஒரு தாமரை இருப்பதாக நினைக்கவும். நற்குணங்களை அதன் மையமாகவும், ஞானத்தை அதன் காம்பாகவும் நினைக்கவும்.தாமரையின் எட்டு இதழ்களும் சாதகனின் அஷ்டமாசித்திகளைக் குறிக்கும். தாமரைப்பூவின் உள்ளே இருக்கும் கேரசங்களும், சூலகமும் தியானத்தைக் குறிப்பதாகக் கொள்ளுங்கள்.
புறத்தினின்று வருகின்ற சித்திகளைத் தியானம் செய்தால் சாதகன் முக்தி அடைவான். அருள்திரு அடிகளார் அவர்களின் பொற்பாதங்கள், சுயம்பு, அல்லது அன்னையின் திருமுகம் ஏதாவது ஒன்றினை ஆழ்மனதில் நிறுத்தித் தியானத்தில் ஈடுபட வேண்டும்.
உங்கள் இதயத்தில் ஒரு சிறு இடைவெளி இருப்பதாகவும், அதில் ஒரு சுடர் எரிவதாகவும், அந்தச் சுடரை உங்கள் ஆன்மாவிற்கு ஆன்மாவாகிய கடவுளாகவும் நினைத்து அதனைத் தியானிக்கவும்.
உங்கள் இதயத்தில் ஒரு சிறு இடைவெளி இருப்பதாகவும், அதில் ஒரு சுடர் எரிவதாகவும், அந்தச் சுடரை உங்கள் ஆன்மாவிற்கு ஆன்மாவாகிய கடவுளாகவும் நினைத்து அதனைத் தியானிக்கவும்.

1. இயன்ற வரையில் உணவு தூய்மையாக இருக்க வேண்டும். உண்பதற்கு முன்பு அன்னையை நினைக்க வேண்டும்.
2. தியானம் செய்யும்போது நீண்டநேரம் அசையாமல் அமர்ந்திருக்க வேண்டும். இதை உடல் நலம் நன்றாக இருந்தால் தான் செய்ய முடியும். நரம்புகள் இயல்பான அமைதி நிலையில் இல்லாவிட்டால் கழுத்திலும், தோள்பட்டையிலும் சிறுசிறு அசைவு ஏற்படும். அசையாமல் இப்படி அமர்ந்திருக்கும் நிலை தியானத்திற்கு உகந்தது. இது உடல் அசெளகரியங்களிலிருந்து ஒருவரைப் பாதுகாக்கிறது.
3. தியானம் செய்வதற்கு முன்பு”ஏன் தியானம் செய்ய வேண்டும்”?என்பது குறித்து ஒருவர் வலுவான காரணம் கொண்டிருக்கவேண்டும். நல்ல உயர்ந்த லட்சியத்தால் ஒருவர் ஈர்க்கப்படவில்லை என்றாலொருவர் செய்யும் தியானம் வலிமையற்றதாகவும், சாதாரணமாகவும் இருக்கும். நன்றாகத் தியானம் செய்வதற்குப் போதிய கவனம் ஒருவரால் செலுத்த முடியாமல் போகும்.
நன்றி
ஆன்மிக குரு அருள்திரு’ அம்மா’ வின் அவதாரம்
பக்கம் 32- 33
&
nbsp;
]]>